Wednesday, March 23, 2011

செய்தி - தெரிஞ்சுகோங்க

மும்பை: நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேவையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா.. ஒரு எஸ்எம்எஸ் போதும். அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் அதிருப்திக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்வார்கள் அதிகாரிகள் என அறிவித்துள்ளது அந்த வங்கி.

13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப் பெரிய அரசு வங்கியாகத் திகழும எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை இது. இனி புகார் செய்ய பேப்பர், பேனா என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறிப்பிட கிளையில் உங்களுக்கு திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால், உடனே உங்கள் மொபைலௌ எடுத்து Unhappy என்று டைப் செய்து 8008202020 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். அடுத்த 48 மணி நேரத்துக்குள் உங்கள் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிடுமாம்.

கடந்த அக்டோபர் மாதம் இந்த சேவை சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்டதால், இப்போது நாடு முழுவதும் அறிமுகமாகிறது.

No comments:

Post a Comment